புதுச்சேரி

புதுவை காந்திவீதி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2022-09-24 08:56 GMT   |   Update On 2022-09-24 08:56 GMT
  • புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிப்பட்டால் சனி பகவானின் பிடியிலிருந்து விடுபட்டு, காரியத்தடைகள் நீங்கி வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.
  • அந்த நம்பிக்கையின் அடிப்படையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் படையலிட்டு பெருமாளை வழிபடுகின்றனர்.

புதுச்சேரி:

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிப்பட்டால் சனி பகவானின் பிடியிலிருந்து விடுபட்டு, காரியத்தடைகள் நீங்கி வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் படையலிட்டு பெருமாளை வழிபடுகின்றனர்.

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி புதுவையில் உள்ள வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீனிவாச பெருமாள், முதலியார்பேட்டை வன்னிய பெருமாள், பாரதி பூங்காவில் உள்ள பாலாஜி வெங்கடேச பெருமாள், வில்லியனூர் வரதராஜபெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.

Tags:    

Similar News