புதுச்சேரி

கோப்பு படம்

தாய்-தந்தையை தாக்கிய மகன்

Published On 2022-06-26 11:22 IST   |   Update On 2022-06-26 11:22:00 IST
  • வில்லியனூர் அருகே சொத்து தகராறில் தாய்-தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
  • இவருக்கு வசந்தி என்ற மனைவியும், கரம்சந்த், ஸ்ரீதர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே சொத்து தகராறில் தாய்-தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர் அருகே உருவையாறு லட்சுமி நரசிம்மர் நகரை சேர்ந்தவர் காந்தி (வயது62). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், கரம்சந்த், ஸ்ரீதர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கரம்சந்த் திருமணம் முடிந்து தனது மனைவி, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் மாடியில் வசித்து வருகிறார். இளையமகன் ஸ்ரீதர் தனது மனைவி, குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.

இதற்கிடையே கரம்சந்த் தனது பெற்றோரிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் வாசலில் இருந்த அலங்கார விளக்கை கரம்சந்த் கழற்றிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாய் வசந்தி பார்த்து ஏன் அலங்கார விளக்குகளை கழற்றுகிறாய் என கேட்டார். அப்போது கரம்சந்த் தனது தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை தட்டிக்கேட்ட அவரது தந்தை காந்தியை முகத்தில் குத்தினார். இதனை தடுக்க முயன்ற தாயையும் அவர் தாக்கினார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த காந்தி மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகியோர் கரிக்கலாம் பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து காந்தி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News