புதுச்சேரி

புதுவை கடற்கரையில் பாதுகாப்பு ஒத்திகை நடந்த போது எடுத்த படம்.

புதுவை கடற்கரையில் பாதுகாப்பு ஒத்திகை

Published On 2022-06-28 09:17 GMT   |   Update On 2022-06-28 09:17 GMT
  • கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் புதுவையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
  • இந்திய கடலோர காவல்படை, புதுவை காவல் துறையுடன் இணைந்து புதுவை கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி:

கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் புதுவையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு ஒத்திகை நடக்கிறது. ஒத்திகையின் போது கடல்வழியாக புதிய நபர்கள் மற்றும் புதிய படகுகள் வருவதை கண்காணிக்கும் பணியில் இந்திய கடலோர காவல்படை, புதுவை காவல் துறையுடன் இணைந்து புதுவை கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணியில் சீனியர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் கடலோர காவல்படை போலீஸ் சூப்பிரண்டு வம்சி ரெட்டி, இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் கடற்கரை பாதுகாப்பினை ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News