- உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- பயனாளிகளுக்கு உதவித் தொகை பெறும் அங்கீகார அடையாள அட்டையை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 17 புதிய பயனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலம் மாற்றுத்தி றனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித் தொகை பெறும் அங்கீகார அடையாள அட்டையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி கலிய மூர்த்தி, தொகுதி துணை செயலாளர் அங்காளன், தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ராஜி, ரமணன், தர்மராஜ், சபரி, முத்துப்பாண்டி, தங்கராசு, ஜெகன்மோகன், ஜனா, கேவி.ஆர். ஏழுமலை, பழனிசாமி, கந்தன், தட்சிணாமூர்த்தி, ஏழுமலை, ஹரி கிருஷ்ணன், அன்பு, திலகர், மிலிட்டரி முருகன், கார்த்தி, ராஜா முகமது, நாதன் , அன்பு நிதி, முருகேசன், ரகு, பாலு, தனகொடி, சேகர் நடராசன், பார்த்திபன், மோகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.