புதுச்சேரி

சாலை விபத்துகளை தவிர்க்க முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சாலை விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பு குழு ஆலோசனை

Published On 2022-10-06 09:31 GMT   |   Update On 2022-10-06 09:31 GMT
  • சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் வணிகவரித்துறை கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது.
  • கூட்டத்தில் புதுவையில் சாலை விபத்துகளை தவிர்ப்பது மற்றும் குறைப்பது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி:

சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் வணிகவரித்துறை கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, மாவட்ட கலெக்டர் வல்லவன், அரசு

செயலர்கள் அருண்,கேசவன், முத்தம்மா, காவல்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் ஆனந்தமோகன், போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், உள்ளாட்சித் துறை இயக்குனர் ரவிதிப் சிங் சஹார், கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதுவையில் சாலை விபத்துகளை தவிர்ப்பது மற்றும் குறைப்பது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News