புதுச்சேரி
ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கும் காட்சி.
காங்கிரஸ் சார்பில் ஏழைகளுக்கு அரிசி
- காமராஜர் பிறந்தநாளையொட்டி ராஜ்பவன் தொகுதி குமரகுருபள்ளத்தில் இலவச அரிசி வழங்கும் விழா நடந்தது.
- காங்கிரஸ் வக்கீல்கள் அணி தலைவர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
காமராஜர் பிறந்தநாளையொட்டி ராஜ்பவன் தொகுதி குமரகுருபள்ளத்தில் இலவச அரிசி வழங்கும் விழா நடந்தது. காங்கிரஸ் வக்கீல்கள் அணி தலைவர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மூத்த துணைத்தலைவர் தேவதாஸ் ஆகியோர் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வேல்முருகன், வட்டார தலைவர்கள் ஜெரால்டு, ராஜ்மோகன், சிறப்பு அழைப்பாளர் பிரதீஷ், தியாகராஜன், ராஜ்குமார், சண்முகம், பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.