புதுச்சேரி

கோப்பு படம்.

கோவில் நிலத்தை அபகரித்ததாக நிரூபித்தால் பதவி விலக தயார்

Published On 2023-09-08 13:45 IST   |   Update On 2023-09-08 13:45:00 IST
  • பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆவேசம்
  • தற்போது அந்த இடம் போலி பத்திரம் மூலம் அபகரிக்க ப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் ரெயின்போ நகரில் உள்ளது.

இந்த நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சார்பதிவாளர் உட்பட 15 பேரை கைது செய்தனர்.

இதன்பின் மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, நில அளவைத்துறை இயக்குனர் ரமேஷ் ஆகியோரையும் கைது செய்தனர். போலி பத்திரம் தயாரித்த இடத்தை பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட்டு கட்சியினர், பல்வேறு சமூக அமைப்பினர் பலகட்ட போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இப்பிரச்சினை குறித்து ஜான்குமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

2021-ல் ரெயின்போ நகரில் 4 மனைகள் ரூ.1.39 கோடிக்கு விலைக்கு வந்தது. அனைத்து பத்திரங்களும் சரியாக இருந்ததால் என் குடும்பத்தினர் பெயரில் நிலத்தை வாங்கினேன். தற்போது அந்த இடம் போலி பத்திரம் மூலம் அபகரிக்க ப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்து ள்ளனர். இந்த இடத்தை பணம் கொடுத்து வாங்கி பாதிக்கப்பட்டுள்ளது நான்தான்.

இதனால் வழக்கி ல் என்னை சாட்சியாக சி.பி.சி .ஐ.டி. போலீசார் சேர்த்துள்ளனர். நான் அபகரிப்பு செய்திருந்தால் என்னை குற்றவாளியாக சேர்த்திருப்பார்கள். என்னைப்பற்றி பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.

காமாட்சி அம்மன் கோவில் நில விவகாரத்தில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிருபித்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. உண்மை விரைவில் வெளிவரும். எனக்கு அமைச்சர் பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜனதாவை சேர்ந்த சிலரே என் மீது வீண் பழி சுமத்துவதாக தெரிகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News