புதுச்சேரி

கோப்பு படம்.

சென்டாக் ஒருங்கிணைப்பாளராக மீண்டும் நியமனம்

Published On 2023-06-08 05:44 GMT   |   Update On 2023-06-08 05:44 GMT
  • புதுவையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை சென்டாக் அமைப்பு நடத்தி வருகிறது.
  • சென்டாக் ஒருங்கிணைப்பாளராக தொழில்துறை இயக்குனர் ருத்ரகவுடு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி:

புதுவையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை சென்டாக் அமைப்பு நடத்தி வருகிறது.

இந்த அமைப்புக்கு கல்வித்துறை செயலர் சேர்மனாகவும், சுகாதாரத்துறை செயலர் துணை சேர்மனாகவும் உள்ளனர். உயர்கல்வித் துறை, சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் உட்பட 11 உறுப்பினர்கள் நிர்வகிக்கின்றனர். இதில் சென்டாக் ஒருங்கிணைப்பாளராக தொழில்துறை இயக்குனர் ருத்ரகவுடு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் ஒருங்கிணைப்பாளராக உயர்கல்வித்துறை இயக்குனர் அமன்சர்மா, கன்வீனராக தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர் சிவராஜ், இணை கன்வீனராக கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரி முதல்வர் சிரில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை உயர்கல்வித்துறை சார்பு செயலர் சவுமியா பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News