புதுச்சேரி

பொதுப்பணித்துறை ஊழியர்கள் போலீசார் உடன் தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சி.

பொதுப்பணித்துறை ஊழியர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளு

Published On 2023-03-20 09:09 GMT   |   Update On 2023-03-20 09:09 GMT
  • புதுவை பொதுப்பணித்துறை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
  • அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

புதுவை பொதுப்பணித்துறை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இன்று 300-க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட வந்தனர்.

அரசு ஆஸ்பத்திரி அருகே குவிந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.

Tags:    

Similar News