மு.க.ஸ்டாலினுடன் புதுவை தி.மு.க.வினர் சந்திப்பு
- தி.மு.க முப்பெரும் விழா வருகிற 15-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
- சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரி:
தி.மு.க முப்பெரும் விழா வருகிற 15-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
விழாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதான பாவேந்தர் விருது புதுவை தி.மு.க மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.திருநாவுக்கரசக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது அவைத்தலைவர்
எஸ்.பி.சிவக்குமார் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், பொருளாளர் லோகையன், துணை அமைப்பாளர்கள் சண் குமாரவேல், பெல்லாரி கலியபெருமாள், குணாதிலீபன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன், தொகுதி பொறுப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், தொகுதி செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.