புதுச்சேரி

இந்திரா காந்தி சிலை அருகே காங்கிரசார் மறியலில் ஈடுபட்ட காட்சி.

மத்திய அரசை கண்டித்து புதுவை காங்கிரசார் மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது

Published On 2022-07-21 09:04 GMT   |   Update On 2022-07-21 10:24 GMT
  • புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, 100 அடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி:

நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த மாதம் ராகுல்காந்தி எம்.பி.யிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் இன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், நீலகங்காதரன், கார்த்திகேயன், பாலன், நிர்வாகிகள் சங்கர், தனுசு, ஆர்.இ.சேகர், ரகுமான், மு.ப.சரவணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொய் வழக்கு போடாதே, பொய் வழக்கு போடாதே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போடாதே, வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு பொய் வழக்கை வாபஸ் வாங்கு, ரத்து செய், ரத்து செய் பொய் வழக்கை ரத்து செய் என கோஷம் எழுப்பினர்.

ஒரு கட்டத்தில் இந்திராகாந்தி சிலையை சுற்றிலும் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, 100 அடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News