புதுச்சேரி

போலீஸ் நிலையம் முன்பு லோகசந்தரின் உறவினர்கள் திரண்டிருந்த காட்சி.

போலீஸ் நிலையத்தில் பொது மக்கள் முற்றுகை

Published On 2022-06-12 14:14 IST   |   Update On 2022-06-12 14:14:00 IST
  • ஏ.சி.மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்-உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
  • குடும்பத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

புதுச்சேரி, ஜூன். 12-

ஏ.சி.மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்-உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

புதுவை பிச்சைவீரன் பேட் புது நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோக சந்தர் (வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரில் ஏ.சி. மெக்கானிக் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லோக சந்தர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் லோக சந்தரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். தற்கொலை செய்து கொண்ட லோக சந்தர் அப்பகுதியில் அரசியல் பிரமுகரின் மனைவியிடம் பழகி வந்ததாகவும். லோக சந்தருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்த நிலையில் அரசியல் பிரமுகரின் மனைவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோகசந்தரை மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும். எனவே தற்கொலைக்கு தூண்டிய அரசியல் பிரமுகரின் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று லோக சந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News