புதுச்சேரி

சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கிய காட்சி.

கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Published On 2022-08-17 05:01 GMT   |   Update On 2022-08-17 05:01 GMT
  • புதுவை காராமணி குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
  • போட்டியில் புதுவை மற்றும் தமிழ்நாடு அளவிலான 28 அணிகள் கலந்து கொண்டன.

புதுச்சேரி:

கால்பந்து நண்பர்கள் கழகத்தின் சார்பில் 20-ம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டிகள் புதுவை காராமணி குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.

போட்டியில் புதுவை மற்றும் தமிழ்நாடு அளவிலான 28 அணிகள் கலந்து கொண்டன.

இந்த போட்டியில் உப்பளம் சிவாஜி அணியினர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தனர். நெய்வேலி ரூனி கால்பந்தாட்ட அணியினர் 2-ம் இடம் பிடித்தனர்.

இந்த போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நெல்லித்தோப்புதொகுதி எம்.எல்.ஏ. ரிச்சர்ட் ஜான்குமார் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தொழிலதிபர் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பையை வழங்கினர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கால்பந்து நண்பர்கள் கழகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News