புதுச்சேரி

பயனாளிகளுக்கு திட்ட கையேட்டை சாய்.இளங்கோவன் வழங்கிய காட்சி.

null

பிரதமர் வீடு கட்டும் திட்ட கையேடு

Published On 2023-06-26 13:59 IST   |   Update On 2023-06-26 14:00:00 IST
  • ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சாய். இளங்கோவன் வழங்கினார்
  • அரியாங்குப்பம் தொகுதிக்கு ட்பட்ட சேத்திலால் நகர் பகுதியில் வசிக்கும் பயனாளிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி:

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு புதுவை அரசு ஆதி திராவிடர் நலத்துறை, நகர மற்றும் கிராம அமைப்பு துறை மற்றும் புதுவை குடிசை மாற்று வாரியம் சார்பில் கொண்டா டப்பட்டது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆதி திராவிடர் நலத்துறை மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அரியாங்குப்பம் தொகுதிக்கு ட்பட்ட சேத்திலால் நகர் பகுதியில் வசிக்கும் பயனாளிகளை சந்திக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தி னராக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் கலந்து கொண்டு, நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று இனிப்புகள் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கையேட்டினை வழங்கினார். மேலும் திட்டத்தின் பயன் குறித்து பொது மக்களிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் நகர மற்றும் கிராம அமைப்பு துறை தலைமை அமைப்பா ளர் கந்தர் செல்வன், நகர அமைப்பாளர் விஜய நேரு மற்றும் ஆதி திராவிடர் அதிகாரி விஜயலட்சுமி , ஆய்வாளர் ராஜா, ராம மூர்த்தி, நகர அமைப்பு துறை அதிகாரி ரவி உட்பட அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News