புதுச்சேரி
திருபுவனை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
- காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை தனிக்குப்பம், நத்த மேடு மின் நிறுத்தம் நடைபெறுகிறது.
- திருபுவனை (பகுதி), ஆண்டியார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி கோர்க்காடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை தனிக்குப்பம், நத்த மேடு, கம்பலிக்காரன்குப்பம், ஏம்பலம், மணக்குப்பம், சங்கரன்பேட், புதுக்குப்பம், செம்பியப்பாளையம், சாத்தமங்கலம், சிவராந்தகம் மற்றும் கீழூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் திருபுவனை துணை மின் நிலையத்திலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கலிதீர்த் தாள்குப்பம், திருபுவனை (பகுதி), ஆண்டியார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.