புதுச்சேரி
- பள்ளி மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்ட தேச விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் படம் வரையும் ஓவியப்போட்டி நடைபெற்றது.
- இந்த ஓவியப் போட்டியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு அமிர்த திருவிழாவை முன்னிட்டு மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் பகுதியில் பள்ளி மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்ட தேச விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் படம் வரையும் ஓவியப்போட்டி நடைபெற்றது.
இந்த ஓவியப் போட்டியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
இந்த ஓவிய போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு தேச தலைவர்களின் படங்களை வரைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கூட்டுறவு கடன் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், தெய்வசிகாமணி, சக்திபாலன், திருவேங்கடம், ஆனந்தன், ராஜதுரை, பழனி, தமிழ், வாழுமுனி, கும்பா குமாரசாமி, அய்யனார், முருகானந்தம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.