புதுச்சேரி

மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

மதுக்கடை அமைக்க எதிர்ப்பு

Published On 2023-02-08 09:32 GMT   |   Update On 2023-02-08 09:32 GMT
  • சாமிபிள்ளை தோட்டம் அருகே மதுபானக்கடை அமைக்கப்பட உள்ளது.
  • இதனால் அந்த மதுபானக்கடை திறக்கப்படவில்லை.

புதுச்சேரி:

புதுவை கருவடிகுப்பம் கிழக்கு கடற்கரை சாலை சாமிபிள்ளை தோட்டம் அருகே மதுபானக்கடை அமைக்கப்பட உள்ளது.

குடியிருப்புகளை ஒட்டிய மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மதுபானக்கடை அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை உருவாக்கி பல போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இதனால் அந்த மதுபானக்கடை திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் மீண்டும் மதுக்கடையை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலை மதுபானக்கடை அருகே போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் லெனின்துரை தலைமை வகித்தார். இந்தியகம்யூனிஸ்டு சேதுசெல்வம், சுப்பையா, மார்க்சிஸ்டு சத்யா, காங்கிரஸ் வினோத், மற்றும் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர். மதுக்கடையை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

Tags:    

Similar News