புதுச்சேரி

கென்னடி எம்.எல்.ஏ.

வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு வாய்ப்பு - கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-08-30 09:30 GMT   |   Update On 2022-08-30 09:30 GMT
  • புதுவை மாநிலம் 2 ஆண்டாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
  • புதுவை முதல்-அமைச்சர் காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் தி.மு.க.

எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி பேசியதாவது:-

புதுவை மாநிலம் 2 ஆண்டாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்த காலத்தில் வேலை வாய்ப்பு பதிவு மூப்பினை தவறவிட்ட இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒருமுறை தளர்வாக பதிவு மூப்பினை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்தார்.

புதுவை முதல்-அமைச்சர் காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலை யில் வேலைவாய்ப்பகத்தில் மூப்பை தவற விட்டவர்களுக்கு மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News