பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க 2 மணி நேரம் அனுமதி
- மாசு கட்டுப்பாட்டு குழுமம் அறிவிப்பு
- சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பட்டாசு களுக்கு பதிலாக பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்ப ட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 மணிநேரம் மட்டுமே...
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். புதுவையில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம். அமைதி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், வழிபாட்டுதலங்கள், கல்விகூடங்கள், நீதிமன்ற வளாக சுற்றுப்புறங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்கக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பட்டாசு களுக்கு பதிலாக பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்ப ட்டுள்ளது.
பட்டாசுகள், வெடிகள் வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் அளவுக்கு வெடி சத்தம் ஏற்படுத்தும் பட்டாசு உபயோகித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் உடல்நலன், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைக்கும் பேரியம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், சரவெடி பட்டாசுகளை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்கவும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்லவும் சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்ப டுத்தாமல் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.