புதுச்சேரி

மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் நோட்டு-புத்தகம் வழங்கிய காட்சி.

மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம்

Published On 2022-09-03 14:23 IST   |   Update On 2022-09-03 14:23:00 IST
  • புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு முதலியார்பேட்டை தொகுதி நயினார் மண்டபம் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
  • நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதலியார்பேட்டை தொகுதி பா.ஜனதா பொதுச்செயலாளர் விஜயகுமார் செய்திருந்தார்.

புதுச்சேரி:

புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு முதலியார்பேட்டை தொகுதி நயினார் மண்டபம் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுதுகோல், பொதுமக்களுக்கு வேட்டி, புடவைகள் வழங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதலியார்பேட்டை தொகுதி பா.ஜனதா பொதுச்செயலாளர் விஜயகுமார் செய்திருந்தார். தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி, தொகுதி தலைவர் இன்பசேகர், மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் வெற்றி செல்வம், வணிக பிரிவு தலைவர் சத்யராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், திருச்சந்திரன், மாநில இளைஞரணி துணைத்தலைவர் விக்ரமாதித்தன், மூத்த நிர்வாகிகள் பழனிவேல், பத்மநாபன், பச்சையப்பன், தொகுதி துணைத்தலைவர்கள் கனகராஜ், மீனாட்சிசுந்தரம், கலியபெருமாள், செயலா–ளர் கோதை, ஓ.பி.சி. அணியின் மாவட்ட தலைவி லட்சுமி, துணை தலைவி மஞ்சுளா, இளைஞரணி நிர்வாகி ராஜ்மோகன், கிளை நிர்வாகிகள் சுதாகர், சரவணன், முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News