புதுச்சேரி

கோப்பு படம்.

புதிதாக மாவட்ட சட்ட நிர்வாக பிரிவு தொடக்கம்

Published On 2023-06-08 05:34 GMT   |   Update On 2023-06-08 05:34 GMT
  • நீதிமன்றங்களில் வழக்குகளின்போது சம்மன் மற்றும் வாரண்டு பிறப்பிக்கப்படும்.
  • இந்த சம்மனில் எந்த வழக்கு, எந்த கோர்ட்டில், எந்த தேதியில் விசாரணை நடத்தப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டிருக்கும்.

புதுச்சேரி:

நீதிமன்றங்களில் வழக்குகளின்போது சம்மன் மற்றும் வாரண்டு பிறப்பிக்கப்படும்.

இந்த சம்மனில் எந்த வழக்கு, எந்த கோர்ட்டில், எந்த தேதியில் விசாரணை நடத்தப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் பலர் குறித்த தேதியில் ஆஜராவதில்லை. இதனால் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கும். இதனால் வழக்கு விசாரணை தள்ளிப்போகும். நீதிமன்றங்களில் வழக்குகளை விரைவாக முடிக்க உதவும் வகையில் புதுவை போலீஸ்துறையில் மாவட்ட சட்டம் மற்றும் நிர்வாக பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் செயல்பட உள்ள இந்த பிரிவில் ஒரு இன்ஸ்பெக்டர் அல்லது சப்-இன்ஸ்பெக்டர், சட்ட புலமை பெற்ற 2 ஆயுதப்படை போலீசார் இடம்பெறுவர்.

மாநிலம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நீண்டநாட்களாக கிடப்பில் உள்ள சம்மன், வாரண்டு வழக்குகளை இந்த குழு கவனிக்கும்.

சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டு வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளையும் கண்காணித்து அறிவுறுத்தும்.

அரசு வக்கீல்களுடன் இணைந்து முக்கிய வழக்குகளில் குற்றவாளிகள் ஜாமீனில் செல்வதை எதிர்த்து ஆட்சேபனை செய்தல், கமிஷன்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது, பொதுமக்கள் புகார்களை கண்காணிப்பது, மாநில குற்ற தரவுகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபடும்.

இந்த புதிய பிரிவு அலுவலகம் உருளைன்பேட்டை ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அமைய உள்ளது.

Tags:    

Similar News