மாணவர்களுக்கான தேசிய ஹேண்ட்பால் போட்டி
- ராஜஸ்தான் மாநிலம் பன்சுவாராவில் 45-வது அகில இந்திய மாணவர்க–ளுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.
- இவர்களுக்கு வழியனுப்பும் விழாவுக்கு சங்க வாழ்நாள் தலைவர், முன்னாள் அமைச்சர் காந்திராஜ் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
ராஜஸ்தான் மாநிலம் பன்சுவாராவில் 45-வது அகில இந்திய மாணவர்க–ளுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் 27-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை நடக்கிது.
இதில் புதுவை மாநில ஹேண்ட்பால் சங்கத்தின் சார்பில் வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு வழியனுப்பும் விழாவுக்கு சங்க வாழ்நாள் தலைவர், முன்னாள் அமைச்சர் காந்திராஜ் தலைமை வகித்தார். முன்னாள் வீரர் கொரிதம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சீருடை வழங்கினர்.
ஹேண்ட்பால் சங்க பொதுச்செயலாளரும், ஒலிம்பிக் சங்க பொருளாளருமான நாராயணசாமி,. உழவர்கரை மாவட்ட தலைவர் சசிக்குமார், புதுவை மாவட்ட இணை செய–லாளர் சிவா, அரியாங்குப்பம் மாவட்ட செயலாளர் ழான்பியர், வில்லியனூர் மாவட்ட செயலாளர் கருணைபிர–காசம், அருள், விஜயராஜா ஆகியோர் வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்த––னர்.
அணிகளின் பயிற்சியாள–ராக டேனியல், காப்பாளராக வீரன் உடன் சென்றனர்.