புதுச்சேரி

தனசேகரன்

வீடுதோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்

Published On 2022-08-12 09:16 IST   |   Update On 2022-08-12 09:16:00 IST
  • அன்னியர்களின் கணக்கை பொய்யாக்கி ஒருமைபாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் உலக அரங்கில் சிறந்த எடுத்தகாட்டாக இந்தியா திகழ்கிறது.
  • பதக்க பட்டியலில் 4-ம் இடத்தில் இந்தியா என்ற வரலாற்றுப் பதிவை செய்திருக்கின்றது

புதுச்சேரி:

என்.ஆர். இலக்கியப் பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

75ஆண்டுகளுக்கு முன்னர் நம்மை அடிமை படுத்தி ஆண்டவர்களின் மண்ணில் இன்று 22 தங்கம் உட்பட 61 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 4-ம் இடத்தில் இந்தியா என்ற வரலாற்றுப் பதிவை செய்திருக்கின்றது என்றால் இது சுதந்திர போராட்டம் நமக்கு கற்றுக் கொடுத்த வெற்றியாகும்.

அன்னியர்களின் கணக்கை பொய்யாக்கி ஒருமைபாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் உலக அரங்கில் சிறந்த எடுத்தகாட்டாக இந்தியா திகழ்கிறது.

வறுமை இருக்கிறது, கொரோனாவால் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. ஆனாலும் ராணுவ பாதுகாப்பில் இந்தியா உலக அளவில் 3-ம் இடத்தில் நிற்கிறது. இது புதுவை விடுதலைக்கு வித்திட்ட வீரப் போராளிகளான பாரதியார், பாரதிதாசனார் ஆகியோரின் படைப்புகளை நாட்டுடமையாக்கியதோடு, ஆண்டுதோறும் சிறப்பிக்கப்படுகின்றார்கள். தியாகி சுப்பையா, குபேர், புதுவை சிவம் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறைக்கு என்.ஆர். இலக்கிய பேரவை கொண்டு செல்லும் என்று உறுதியேற்கிறது. தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் தேசப்பற்றை வெளிப்படுத்தி மக்கள் பணியாற்றி வரும் நம் மக்கள் முதல்-அமைச்சர் என்.ஆர். வழி நின்று, நம் சுவாசகாற்றை சுத்தப்படுத்திய சுதந்திர போராட்ட தியாகிகளை வணங்குவோம். வீடுதோறும் விடுதலைக் கொடி ஏற்றுவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News