புதுச்சேரி

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட நிகழ்ச்சியில், எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண், சென்னை ஐஸ்கேல் ப்ரோ. நிறுவனர் வித்யா சந்திரசேகரன், கணபதி ராமன், எம்.ஐ.டி. கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள் பங்கேற்ற காட்சி.

தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2023-08-23 04:14 GMT   |   Update On 2023-08-23 04:14 GMT
  • எம்.ஐ.டி.கல்லூரியில் நடைபெற்றது.
  • மாணவர்களுக்கு அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் ஆன்லைன் மூலகமாக பயிற்சி நடந்தது.

புதுச்சேரி:

புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.கல்லூரி), சென்னை ஐஸ்கேல் ப்ரோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு பரிமாற்றம் செய்து கொண்டது.

எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் ஆன்லைன் மூலகமாக பயிற்சி ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொதுவான நோக்கங்கள் ஆகும்.

நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் முன்னிலையில், எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண், ஐஸ்கேல் ப்ரோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கட் ராமகிருஷ்ணன், வித்யா சந்திரசேகரன் இயக்குனர், இணை நிறுவனர் கணபதி ராமன் சீனியர் சாப்ட்வேர் என்ஜினீயர், மற்றும் அனைத்து வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News