புதுச்சேரி

கோப்பு படம்

மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-08-31 14:25 IST   |   Update On 2022-08-31 14:25:00 IST
  • சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு ஸ்டீபன் ராஜ் வீட்டில் தூங்க சென்றார்
  • மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் ஸ்டீபன்ராஜ் திடுக்கிட்டார்.

புதுச்சேரி:

புதுவை நெல்லித்தோப்பு கண்ணாரவீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஸ்டீபன்ராஜ் இவர் தனியார் மருந்தகத்தில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு ஸ்டீபன் ராஜ் வீட்டில் தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் ஸ்டீபன்ராஜ் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்டீபன்ராஜ் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News