புதுச்சேரி

எம்.ஐ.டி. கல்லூரியில் உலக வாழ்விட தின கருத்தரங்கு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

எம்.ஐ.டி. கல்லூரியில் உலக வாழ்விட தின கருத்தரங்கு

Published On 2023-10-31 03:40 GMT   |   Update On 2023-10-31 03:40 GMT
  • உலக வாழ்விட தினம் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
  • மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி.) இயந்திரவியல் துறை இந்திய பொறியாளர் அமைப்பு மாணவர் பிரிவு சார்பில் உலக வாழ்விட தினம் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார். இந்திய பொறியாளர் அமைப்பின் புதுவை மாநில தலைவர் மற்றும் இயந்திரவியல் துறைத் தலைவர் ராஜாராம் வரவேற்புரை நிகழ்த்தினார். புதுவை கிரீன் கியாஸ்- கெமிக்கல்ஸ் பெர்டிலைசர்ஸ் தனியார் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி என்ஜினீயர் ஞானசேகரன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கருத்தரங்கில் இயந்திரவியல் துறை மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ் குமார் நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடவியல் துறை பேராசிரியை ராஜலட்சுமி மற்றும் உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News