புதுச்சேரி

கோப்பு படம்.

சட்டத்திற்கு புறம்பாக ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை

Published On 2023-02-27 05:19 GMT   |   Update On 2023-02-27 05:19 GMT
  • புதுவை கடல் பகுதியில் சிறு தொழில் செய்யும் மீனவர்கள் தற்போது கடலில் வலை விட முடியாத சூழல் உள்ளதாக அரசுக்கு மனு அளித்துள்ளனர்.
  • சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் இந்த தொழில் முறையை தடுக்க வேண்டிய கடலூர் மற்றும் புதுவை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

புதுச்சேரி:

மூ. புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்து சார்பில், புதுவை கடல் பகுதியில் சிறு தொழில் செய்யும் மீனவர்கள் தற்போது கடலில் வலை விட முடியாத சூழல் உள்ளதாக அரசுக்கு மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இயற்கைக்கு மாறான மிகவும் அபாயகரமான முறையில் ஒரு சில மீனவர்கள் கணவாய் மீன் பிடிப்பதற்காக பிளாஸ்டிக் கேன்கள், மணல் மூட்டைகள், சவுக்கு மரக்கிளைகள் இவைகளை கடலில் இறக்குவதால் வலை அதில் சிக்கி கிழிந்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் மீன்களும் கிடைப்பதில்லை,

கரைப்பகுதியில் 8 பாகம் அளவிலும் கூக்கான் இறக்குவதால் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது.

கடலின் சூழலை சீர்குலைத்து இயற்கைக்கு மாறாக தொழில் செய்வதால் கடல் வளம் பாதிக்கப்படுவதோடு, சிறு தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் இந்த தொழில் முறையை தடுக்க வேண்டிய கடலூர் மற்றும் புதுவை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனர்,

மேலும் இவற்றை கண்காணிக்க வேண்டிய கடலோர காவல்படை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கடல் மாசு ஏற்படுவதுடன் மீன்கள் வாழ முடியாது நிலை உள்ளது,

சம்மந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் இதன் மீது கவனம் செலுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு இந்த தொழில் முறையை தடுத்து கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News