புதுச்சேரி

கோப்பு படம்

லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-10-22 07:30 GMT   |   Update On 2022-10-22 07:30 GMT
  • கிருமாம்பாக்கத்தை அடுத்த கன்னியகோயில், மாரியம்மன் கோயில் விதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36) லாரி டிரைவர்.
  • இவருக்கு இந்திரா என்ற மனைவியும் 2 மகள் ஒரு மகன் இருந்து வருகிறது.

புதுச்சேரி:

கிருமாம்பாக்கத்தை அடுத்த கன்னியகோயில், மாரியம்மன் கோயில் விதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36) லாரி டிரைவர். இவருக்கு இந்திரா என்ற மனைவியும் 2 மகள் ஒரு மகன் இருந்து வருகிறது.

வினோத் குமார் குடும்பத்துடன் திருவண்ணாமலையில் வசித்து வந்தார். பின்னர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியகோவில் பகுதியில் மாமியார் வீட்டிலேயே வசித்து வந்தார்.

இதற்கிடையே வினோத் குமாருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் வினோத் குமார் குடித்துவிட்டு வந்து இந்திராவிடம் தகராறு செய்தார். இதனால் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் இந்திரா தனது மகள்களை அழைத்துக் கொண்டு தனது தங்கை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தனியாக இருந்த வினோத்குமார் மணமடைந்து வீட்டில் இருந்த மின் விசிறியில் மகளின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மனைவி இந்திரா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News