புதுச்சேரி

கோப்பு படம்.

லஞ்சம் வாங்கினால் சட்ட நடவடிக்கை

Published On 2023-11-09 08:54 GMT   |   Update On 2023-11-09 08:54 GMT
  • லஞ்ச ஒழிப்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
  • அரசு துறை இடையில் தரகர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் குடிமைப்பொருள் வழங்கல் துறையில் லஞ்ச ஒழிப்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், ராமு, ஆகியோர் லஞ்ச ஒழிப்பு குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் தியாகராஜன், பொதுமக்கள், அரசு துறை இடையில் தரகர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

முறையான நபர்களுக்கு சிகப்பு ரேஷன்கார்டு வழங்க வேண்டும். அலுவலகத்தில் சி.சி.டி.வி. பொருத்த வேண்டும். ஆன்லைன் சேவையை சரியாக செயல்படுத்த வேண்டும்.

லஞ்சம் வாங்கினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News