புதுச்சேரி

பயிற்சி முகாமை , அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

கராத்தே பயிற்சி முகாம்

Published On 2023-03-06 09:33 IST   |   Update On 2023-03-06 09:33:00 IST
  • கராத்தே சங்கம் சார்பில் உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
  • ஒழுக்கமான வாழ்வை வாழ்ந்து அறநெறியோடு பயணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை மாநில செகோ-காய் கராத்தே சங்கம் சார்பில் உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி முகாம் நடந்தது.

பயிற்சி முகாமை , அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

அப்போது உடல், மன ஆரோக்கியத்தில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒழுக்கமான வாழ்வை வாழ்ந்து அறநெறியோடு பயணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு இந்தியன் செகோ-காய் தலைவர் பாரத்சர்மா தமிழ்நாடு கராத்தே சங்க செயலாளர் அல்தாப் ஆலம் தென்னிந்திய கராத்தே சங்க தலைவர் அன்சிஜேக்கப் முன்னிலை வகித்தனர்.

இதில் புதுவையில் உள்ள தலைமை கராத்தே பயிற்சி யாளர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை செகோ-காய் தலைவர் பழனிவேல் செய்திருந்தார்.

Tags:    

Similar News