புதுச்சேரி

கருத்தரங்கை கவர்னர் தமிழிசை,அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அருகில் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித் சிங் உள்ளார்.

சர்வதேச கருத்தரங்கம் - கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்

Published On 2022-12-20 09:18 GMT   |   Update On 2022-12-20 09:18 GMT
  • தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் ஸ்ரீ வானவில் கே.ரவி 100-வது கருத்தரங்கு புதுவை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை விடுதியில் நடந்தது.
  • கவர்னர் தமிழிசை கருத்தரங்கத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை பல்கலைக்கழக சுப்ரமணிய பாரதியார் தமிழ் ஆய்வு மையம் மற்றும் பாலக்காடு, தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் ஸ்ரீ வானவில் கே.ரவி 100-வது கருத்தரங்கு புதுவை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை விடுதியில் நடந்தது.

கவர்னர் தமிழிசை கருத்தரங்கத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். குர்மீத் சிங், அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. , பாலக்காடு தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ராஜாராம், சுப்ரமணிய பாரதியார் தமிழ் ஆய்வு மையத்தின் புல முதல்வர் சந்திரிகா, அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News