புதுச்சேரி

நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மோதல்

Published On 2023-11-23 05:31 GMT   |   Update On 2023-11-23 05:31 GMT
  • இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு ஆவணங்கள் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனை அழைத்து விவரம் கேட்டுள்ளார்.
  • போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டிக்கு தெரியவந்தது.

புதுச்சேரி:

புதுவை நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜ்குமார் பணிபுரிந்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக கதிரேசன் உள்ளார்.

இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு ஆவணங்கள் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனை அழைத்து விவரம் கேட்டுள்ளார்.

இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த விளக்கம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு திருப்தி ஏற்படவில்லை.

இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அங்கிருந்த போலீசார் 2 பேரையும் சமாதானம் செய்தனர். பின்னர் 2 பேரும் போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டிக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்து அவர்களை கண்டித்துள்ளார். அதன் பிறகு 2 பேரும் பணிக்கு திரும்பினர்.

பொதுமக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய போலீசாரே போலீஸ் நிலையத்தில் மல்லுக் கட்டிய சம்பவம் நெட்டப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News