புதுச்சேரி
- அதன் தொடர்ச்சியாக மாணவி களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது.
- பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியை ரஜினி சனோலியன் பங்கேற்றார்.
புதுச்சேரி:
புதுவை திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தின விழாவை யொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மாணவி களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வர் கலாவதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியை ரஜினி சனோலியன் பங்கேற்றார். நடுவர்களாக பள்ளியின் விரிவுரையாளர்கள் மணிமொழி, சிவபிரியா ஆகியோர் பணிபுரிந்து மாணவிகளின் ஓவியங் களை மதிப்பீடு செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரிவுரை யாளர் தெய்வகுமாரி மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.