புதுச்சேரி
அன்னுசாமி பள்ளியில் சுதந்திர தினவிழா தொடக்கம்
- அன்னுசாமி மேல்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.
- இதன் தொடக்க நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் இருதயமேரி வரவேற்றார்.
புதுச்சேரி:
பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் இருதயமேரி வரவேற்றார். பள்ளி தாளாளர் ராஜராஜன் நோக்க உரையாற்றினார்.
விழாவில் தினம் ஒரு பேச்சாளர் என்ற நிகழ்ச்சியில் அரிமதி இளம் பரிதி கலந்துகொண்டு நாம் பெற்ற சுதந்திரம் என்ற தலைப்பில் பேசுகையில், சுதந்திரத்திற்காக தலைவர்கள் செய்த தியாகம், அர்ப் பணிப்பு ஆகியவை குறித்து எடுத்துக்கூறினார்.
மேலும் பாடல், ஓவியம், பேச்சு, கோலம், நடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு சுதந்திர தினவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முடிவில் பள்ளியின்முதல்வர் அருள் செல்வி நன்றி கூறினார்.