புதுச்சேரி

கென்னடி எம்.எல்.ஏ. 300 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய காட்சி. 

முதியோர் உதவித் தொகை பெற அடையாள அட்டை

Published On 2023-02-18 05:10 GMT   |   Update On 2023-02-18 05:10 GMT
  • உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது.
  • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குனர் அமுதா, தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் ரவி, செயலாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் முதியோர், விதவை, முதிர் கன்னிகள் ஆகியோருக்கு உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 300 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குனர் அமுதா, தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் ரவி, செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் தங்க

வேலு, கலை , இலக்கிய பிரிவு சந்திரன், இளைஞர் அணி ராஜி, மீனவர் அணி விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News