கொலையாளி பஞ்சமூர்த்தி
null
வாரிசு இல்லாமல் போகும் என திட்டியதால் கொலை
- போலீஸ்காரரின் தாயை கொன்றவர் பரபரப்பு வாக்குமூலம்
- அவருக்கும், கோவிந்த ம்மாளுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் அருகே உள்ள அரியூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிமூலம் இவரதுய மனைவி கோவிந்தம்மாள் (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் புதுவை காவல் துறையில் போலீஸ்பணிக்கு தேர்வாகி பயிற்சி பெற்று வருகிறார்.
கோவிந்தம்மாள் ஜிப்மரில் ஒப்பந்த துப்புரவு ஊழியராக வேலை செய்து வந்தார்.
கடந்த 10-ந் தேதி இரவு கோவிந்தம்மாள் பணி முடிந்து அரியூர் பஸ்ஸ்டாப்பில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் கோவிந்த ம்மாளின் பின்பக்க தலையில் இரும்பு ராடால் தாக்கி விட்டு தப்பிஓடி விட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தம்மாள் சிறிதுநேரத்தில் இறந்தார்.
இந்த கொலை குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
சம்பவத்தன்று கோவிந்த ம்மாள் நடந்து வந்த மைதானம் மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 40 பேரிடம் விசா ரணை நடத்தினர். இதில் கோவிந்தம்மாள் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த பஞ்சமூர்த்தி(32) என்பவர் மாயமானது தெரியவந்தது. அவருக்கும், கோவிந்த ம்மாளுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. முன்விரோ தத்தில் கோவி ந்தம்மாளை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பண்ருட்டி யில் பதுங்கி யிருந்த பஞ்சமூர்த்தியை போலீசார் கைது செ ய்தனர். கைது செய்யப்பட்ட பஞ்சமூர்த்தி போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:-
எனது குடும்பமும், கோவிந்தம்மாள் குடும்பமும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருகிறோம். கால்வாயில் குப்பை கொட்டுவதில் இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்படும். அப்போது, கோவிந்தம்மாள் தரக்குறைவாக பேசுவார்.
சமீபத்தில் இதுபோல பிரச்சினை வந்தபோது, கோவிந்தம்மாள் எங்கள் குடும்பத்தை பற்றி கடுமை யான வார்த்தைகளால் பேசினார். எனக்கு திருமண மாகி 6 மாதம்தான் ஆகிறது. என் மனைவி கர்ப்பமாக உள்ளார். வாரிசு உருவா காது. அழிந்து போய்விடும் என்றெல்லாம் அவர் பேசினார்.
இது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக இரும்பு ராடை எடுத்துச்சென்று மறைத்து வைத்திருந்து காத்திருந்தேன். அவர் பஸ்சில் இருந்து இறங்கி வந்தபோது, தலையில் இரும்புராடால் அடித்து கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு ராடை கைப்பற்றினர்.