புதுச்சேரி
- புதுவையில் இந்து முன்னணி சார்பில் இந்துகளின் உரிமையை மீட்க நடைபெற்றது.
- சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவையில் இந்து முன்னணி சார்பில் இந்துகளின் உரிமையை மீட்க நடைபெற்ற பிரச்சாரத்தின் போது இந்து முன்னணியின் வரவேற்பு பேனர் கிழிக்கப்பட்டதை கண்டித்தும் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரை கண்டித்தும் இந்து முன்னணி சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் என்ற சிவா தலைமை தாங்கினார்.
இளஞ்செழியன் வரவேற்புரையாற்றினர். செந்தில் முருகன், நாகராஜ், மணிவீரப்பன், தியாகராஜன், செல்வம், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிவண்ணன், சிவமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் குமார் நன்றி கூறினர்.