புதுச்சேரி

உயர் மின் கோபுர விளக்கை இயக்கி வைத்த வைத்திலிங்கம் எம்.பி.க்கு, அங்காளன் எம்.எல்.ஏ. பூங்கொத்து கொடுத்து வரவேற்ற காட்சி.

ரூ.4 லட்சம் செலவில் உயர் மின் கோபுர விளக்கு

Published On 2022-09-07 15:15 IST   |   Update On 2022-09-07 15:15:00 IST
  • மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.
  • 3 உயர் மின் விளக்கு கோபுரம் அமைப்பதற்கு புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 4 லட்சத்து 34 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி நடைபெற்று முடிந்து.

புதுச்சேரி:

மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.

இதனையொட்டி சந்தை பகுதியில் காய்கறிகள் மற்றும் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருக்கும் இங்கு செவ்வாய்க்கிழமை தாறும் அதிக அளவில் பொதுமக்கள் வந்து தங்கள் தேவைக்கான பொருட்களை வாங்கி செல்வர். வியாபாரம் இரவு 10 மணி வரை நடைபெறும்.

ஆனால் சந்தை பகுதியில் போதுமான வெளிச்சமின்மை காரணமாக வியாபாரிகள் இரவு நேரங்களில் சிரமத்துடனே வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் முயற்சியின் மூலம் சந்தை பகுதியில் 3 உயர் மின் விளக்கு கோபுரம் அமைப்பதற்கு புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 4 லட்சத்து 34 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி நடைபெற்று முடிந்து. ெதாடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக

வைத்திலிங்கம்

எம்.பி. கலந்து கொண்டு உயர்மின் விளக்கை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் 

Tags:    

Similar News