புதுச்சேரி

கோப்பு படம்.

மதுக்கடையில் கத்தியை காட்டி ரகளை

Published On 2023-05-18 08:09 GMT   |   Update On 2023-05-18 08:09 GMT
  • பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது
  • 2 பேரையும் பிடித்து, அவர்கள் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூரில் உள்ள தனியார் மதுக்கடை யில் 2 பேர் மது அருந்திவிட்டு அங்கிருந்தவர்களிடம் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சென்று அங்கு ரகளை ஈடுபட்ட கோபாலன் கடையை சேர்ந்த குமார் என்கிற கலைகுமார்(23), ராஜா(21) ஆகிய 2 பேரையும் பிடித்து, அவர்கள் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். கைதான குமார் என்கிற கலைக்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News