புதுச்சேரி

எரிவாயு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்த போது எடுத்த படம்.

எரிவாயு குறித்த விழிப்புணர்வு முகாம்

Published On 2023-02-10 10:43 IST   |   Update On 2023-02-10 10:43:00 IST
  • மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளிக்க ப்பட்டது.
  • விழிப்புணர்வு செயல் விளக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

புதுச்சேரி:

திருபுவனையில் உள்ள அன்னை வித்யா மந்திர் பள்ளி மற்றும் பாண்டுரங்கா இண்டேன் கியாஸ் ஏஜென்சியும் இணைந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எரிவாயு பயன்பாடு மற்றும் தீ பரவினால் அதனை அணைக்கும் முறைகள், தற்போது உள்ள கியாஸ் பயன்பாட்டை எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட, பல்வேறு செயல் விளக்க மாக பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் தனசெல்வம் கலந்து கொண்டு விழிப்புணர்வு செயல் விளக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தன செல்வம் தீயினால் ஏற்படும் விளைவுகளையும், அதிலிருந்து மாணவர்கள் எப்படி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் கியாஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு விழிப்புணர்வு குழுவை சேர்ந்த சீனிவாசன், நாகராணி, கவுசல்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு எரிவாயு பயன்பாடு தீ விபத்தினை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினர்.

முடிவில் பள்ளியின் மாணவர்களுக்கு சான்றிதழ்களை தாளாளர் தனசெல்வம் வழங்கினார். இதில் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News