விநாயகர் சிலை ஊர்வலத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டிராக்டர் ஓட்டி சென்ற காட்சி.
- காலாப்பட்டு முருகன் கோயில் குளம் எதிரே 21 அடி உயர விநாயகர் பூஜிக்கப்பட்டு 2 நாட்களாக அர்ச்சனை, ஆராதனை ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தது.
- இந்த ஊர்வலத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கொடியாசைத்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
காலாப்பட்டு முருகன் கோயில் குளம் எதிரே 21 அடி உயர விநாயகர் பூஜிக்கப்பட்டு 2 நாட்களாக அர்ச்சனை, ஆராதனை ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தது.
மேலும் பெண்கள் பங்கேற்ற கோலப்போட்டி, குத்துவிளக்கு பூஜை ஆகியவையும் நடைபெற்றது. 3-ம் நாள் நிகழ்ச்சியையொட்டி தமிழக மற்றும் புதுவையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காலாப்பட்டு பகுதியில் ஒருங்கிணைத்து ஊர்வலமாக சென்று பொம்மையார்பாளையம் பகுதியில் உள்ள கடல் பகுதியில் கரைக்கப்பட்டது.
இந்த ஊர்வலத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கொடியாசைத்து தொடங்கி வைத்தார். இதில்
எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், அசோக் பாபு, இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் முருகையன், பா.ஜனதா நிர்வாகி லட்சுமிநாராயணன், புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் சாந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு பேரவை தலைவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் குப்பன், பேரவை கவுரவத் தலைவர் மணி, பொதுச் செயலாளர் கருணாகரன்,
பா.ஜனதா முன்னாள் துணைத்தலைவர் பரந்தாமன், முன்னாள் மாநில செயலாளர் முருகன், பேரவை துணைத் தலைவர் உத்தராடம், முன்னாள் மாநில தலைவர் வக்கீல் திருமுருகன், மத்திய அரசு வக்கீல் ராஜசேகர், ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் கோதண்டம், சரவணன், பி.எம்.எஸ், மாநிலத் தலைவர் ஆசைதம்பி, ஒருங்கிணைப்பு பேரவை துணைத் தலைவர் சக்கரவர்த்தி, பா.ஜனதா விழுப்புரம் மாவட்ட விவசாய தலைவர் குட்டியாண்டி, பசு பாதுகாப்பு தலைவர் கிருஷ்ணகாந்தன், பா.ஜனதா முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் தேவேந்திரகுமார், தனஞ்செயன், முன்னாள் மாவட்ட தலைவர் தசராமன் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கமலக்கண்ணன், ரமேஷ், மணிவண்ணன், கார்த்தி, சிவா, அருள்ஜோதி தட்சிணாமூர்த்தி, விக்னேஷ், அரசு ராகுல், தெய்வசிகாமணி, நடராஜன், பாலாஜி, குணசீலன், பாரத வேல்முருகன், கணபதி, தயா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பொருளாளர் கண்ணன் செய்திருந்தார்.