புதுச்சேரி
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
- 200 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சின்னாத்தா அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவ- மாணவிக ளுக்கு பிற்படுத்தப்பட்டடோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 200 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் குமரன், உதவி இயக்குனர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.