புதுச்சேரி

கோப்பு படம்.

null

பாகூருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2023-09-28 14:31 IST   |   Update On 2023-09-28 14:42:00 IST
  • பாகூர் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
  • இது குறித்து கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

புதுச்சேரி:

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓர பாகூர் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

சாத்தனூர் அணையின் நீர்வரத்து பகுதிகளில் பெய்து வரும் பருவ மழை காரணமாக அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் 116.75 அடிக்கு மேல் உபரி நீரினை பாசன விதிமுறைகளின் படி வெளியேற்ற வேண்டியுள்ளது. இன்று 1,035 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என்ற தகவல் உதவி செயற்பொறியாளர் சாத்தனூர் அணை செயற்பொறியாளர் மூலம் பெறப்பட்டுள்ளது.

மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர் வெளியேற்றும் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 10,000 கன அடி வரை வெளியேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணையாற்றின் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. மேலும் தென்பெண்னை ஆற்றின் அமைந்துள்ள புதுவை கிராமங்களான நெட்டப்பாக்கம், பண்ட சோழநல்லூர், வடுகுப்பம், ஏம்பலம், நத்தமேடு. கம்பளிகாரன்குப்பம், மணமேடு, குருவிநத்தம், பரிக்கல்பட்டு, சொரியங்குப்பம், கொமந்தமேடு, உச்சிமேடு, முதலிய பகுதி வாழ் மக்கள் கரையோரம் உள்ள தமது உடமைகளையும் கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் ஆற்றில் இறங்கவோ ஆற்றில் குளிக்கவோ ஆற்றங்கரையை கடக்கவோ கூடாது என்றும் அதனை மீறுவோர் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரி க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஒட்டி பாகூர் தாசில்தார் கோபாலகி ருஷ்ணன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரி கள் தென்பனையாற்று கரையோரங்களில் உள்ள கிராமங்களில் ஒளிபரப்பின் மூலம் வெள்ள அபாயம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News