- புதுவை வம்பாகீரப்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் செல்வம்.
- இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், ரூபினா என்ற மகளும் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் செல்வம். மீனவர். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், ரூபினா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.
விஜயகுமாரி புதுவை பெரிய மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக செல்வம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் இதற்காக எந்த மருத்துவமும் எடுத்துகொள்ளவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக செல்வம் நோயினால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் உடல்நிலை பாதிப்பால் செல்வம் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. விஜயகுமாரி வழக்கம் போல் பெரிய மார்க்கெட்டில் மீன் வியாபாரத்துக்கு சென்றார். மதியம் வியாபாரம் முடிந்து விஜயகுமாரி வீடு திரும்பிய போது வீட்டில் மின் விசிறியில் கணவர் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து விஜயகுமாரி கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.