புதுச்சேரி

விபத்தில் பலியான நீலமேகம், தேன்குழலி.

விபத்தில் தந்தை-மகள் பலி 2-வது நாளாக மறியல்

Published On 2022-07-29 12:35 IST   |   Update On 2022-07-29 12:35:00 IST
  • வானுார் ஒன்றியம் திருவக்கரை கல்மரப்பூங்கா அருகே உள்ள சேனிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் (58) இவரது மகள் தேன்குழலி (25) எம்.பி.ஏ., பட்டதாரி.
  • திருவக்கரை குவாரியில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

புதுச்சேரி:

வானுார் ஒன்றியம் திருவக்கரை கல்மரப்பூங்கா அருகே உள்ள சேனிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் (58) இவரது மகள் தேன்குழலி (25) எம்.பி.ஏ., பட்டதாரி.

நீலமேகம் தனது மகள் தேன்குழலியுடன் மோட்டார் சைக்களில் சேனிப்பட்டில் இருந்து அருகில் உள்ள புதுவை பகுதியான திருக்கனுார் கடை வீதிக்குச் சென்று மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு சென்றார்.

அவர்கள் திருமங்கலம் பாதை நான்குமுனை சந்திப்பில் இருந்து கொடுக்கூர் நடு ஏரிக்கரை அருகே சென்றபோது எதிரே திருவக்கரை குவாரியில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே தலை மற்றும் உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்த கொடுக்கூர் கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் விபத்தில் இறந்த உடல்களை ஏற்றிச்செல்ல வந்த ஆம்புலன்ஸ் வண்டியை மறித்து, உடலை ஏற்ற விடமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவக்கரையில் உள்ள மலை பகுதி குவாரியில் கருங்கல் ஜல்லி ஏற்றிச்செல்லும் லாரி டிரைவர்கள் சாலை விதிகளை கடைபிடிக்காமல் அதிவேகமாக செல்வதை வாடிக்யைாக கொண்டு ள்ளனர்.

எனவே இப்பகுதியில் சாலை விபத்துகளில் உயிர் பலியை தடுக்க மாவட்ட கலெக்டர்,போலீசார் மற்றும் சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். கண்டமங்கலம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து போராட்டம் வாபஸ் ஆனது. போலீசார் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை விபத்து நடந்த பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திருமங்கலம் 4 முறை சந்திப்பில் விபத்து ஏற்படுத்திச் சென்ற லாரியை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியல் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் காவல்துறையின் மூலம் உடனடியாக விபத்து ஏற்படுத்திய லாரியை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் புதுவை-திருக்கனூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News