புதுச்சேரி

கருத்தரங்கை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்து பேசிய காட்சி. 

தொழிற்சாலைகள் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும்-அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவுறுத்தல்

Published On 2022-06-14 14:37 IST   |   Update On 2022-06-14 14:37:00 IST
  • பின்தங்கிய கிராமங்கள் மற்றும் குழந்தைகளை தொழிற்சாலைகள் தத்தெடுக்க வேண்டும்
  • குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு வார விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுச்சேரி:

புதுவை அரசு தொழிலாளர் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு வார விழிப்புணர்வு கருத்தரங்கம் தொழிலாளர் துறை கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.

தொழிலாளர் துறை அமைச்சர் சந்திர–பிரியங்கா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கிறோம். எதிர்ப்பு தினமாக மட்டும் கடை பிடிக்காமல் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

புதுவையில் குழந்தை தொழிலாளர்கள் மிகவும் குறைவு. உலகம் முழு–வதும் எடுக்கப்பட்ட ஆய்வில் கொரோனா காலத்தில் மீண்டும் குழந்தை தொழிலாளர்கள் அதிக–ரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுவையை பிற மாநிலங்களோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். அதேபோல தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். எத்தனை பள்ளிகள் இடஒதுக்கீடு அளிக்கிறது என்பது கேள்விக்குறிதான்.

அனைத்து சமுதாயத்தி–லும் ஏழைகள் உள்ளனர். இதில் ஜாதி, மத வித்தியாசம் இல்லை. என்னை பொறுத்தவரை வசதியானவர்கள், வசதியற்றவர்கள் என 2 பேர் தான் உள்ளனர்.

தொழிற்சாலைகள் சமூகபங்களிப்பு திட்டத்தின் கீழ் குழந்தை–களை தத்தெடுக்க வேண்டும். பின்தங்கிய கிராமங்களையும் தத்தெ–டுக்க வேண்டும். சிறுவர்கள் வேலைக்கு வர அவர்களின் குடும்ப சூழலும், ஏழ்மையும்–தான் காரணம். இந்த சூழலை நாம் மாற்ற வேண்டும்.

இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். அடுத்த ஆண்டு எவ்வளவு குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளோம், தடுத்து உள்ளோம் என்ற புள்ளி விபரங்களோடு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர் துறை செயலாளர் சுந்தரேசன் வரவேற்றார். அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். புதுவை சட்டப்பணிகள் ஆணைய மாவட்ட நீதிபதி செந்தில்குமார் கருத்துரை வழங்கினார்.

சமூகநலத்துறை இயக்குனர் ஸ்ரீமதிபத்மாவதி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் முத்துமீனா, குழந்தைகள் நல குழும தலைவர் சிவசாமி ஆகி–யோர் வாழ்த்தி பேசினர். தொழிலாளர் அதிகாரி மரிஜோஸ்பின் சித்ரா நன்றி கூறினார்.

தொடர்ந்து எஸ்.ஆர்.எம். சட்டப்பள்ளி பேராசிரியர் வின்சென்ட்கொம்புராஜ், அரசு சட்டக்கல்லூரி துணை பேராசிரியர் அனிதா ஆகியோர் குழந்தை தொழிலாளர் முறையின் சமூக தீமையும், சட்ட ஒழுங்குமுறையும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரையாற்றினார்.

Tags:    

Similar News