புதுச்சேரி

கோப்பு படம்.

மதுவில் கிருமிநாசினி கலந்து குடித்து முதியவர் தற்கொலை

Published On 2023-02-17 10:56 IST   |   Update On 2023-02-17 10:56:00 IST
  • மதுவில் கிருமிநாசினி கலந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • அப்போது தந்தை மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தனது சகோதரர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

புதுச்சேரி:

மதுவில் கிருமிநாசினி கலந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுவை மறைமலை அடிகள் சாலை அருந்ததி நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது90). இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 2 மகன்களும் நெல்லித்தோப்பில் பேக்கரி கடை நடத்தி வருகின்றனர்.

மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனிமையில் வசித்து வந்தார். அவருக்கு தினமும் அவரது மகன்கள் மற்றும் மகள் சாப்பாடு கொடுத்து வந்தனர்.

ஆனாலும் தனிமையில் வசித்து வந்ததால் கிருஷ்ணமூர்த்தி விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று மதுவில் கிருமி நாசினி கலந்து குடித்தார்.

இதில் அவரது மகள் செல்வி சாப்பாடு கொடுக்க வீட்டுக்கு வந்தார். அப்போது தந்தை மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தனது சகோதரர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் விரைந்து வந்து கிருஷ்ணமூர்த்தியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவை லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் பாரதிதெருவை சேர்ந்தவர் ஞானமூர்த்தி(66). இவருக்கு ராஜன் என்ற மனைவியும், பிரேம்சுந்தர் மற்றும் விஜய்இளங்கோ ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ராஜன் புதுவையில் உள்ள தனியார் என்ஜினீயர் கல்லூரியில் பேராசிரியராகவும், விஜய்இளங்கோ அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

சம்பவத்தன்று அதிகாலை படுக்கை அறையில் இருந்து எழுந்து நடந்து சென்ற போது ஞானமூர்த்தி தரையில் வழுக்கி விழுந்தார்.

உடனே அவரது மருமகளான டாக்டர் நளினி ஞானமூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஞான மூர்த்தியை அனுமதித்தனர்.

அதன்பின்பு மேல் சிகிச்சைக்காக கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ஞானமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மகன் பிரேம்சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News