புதுச்சேரி
கருணாநிதி நினைவு நாளையொட்டி அன்னதானம்
- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
- சிவா எம்,எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி தி.மு.க. சார்பில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்,எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். சன்.சண்முகம் முன்னிலை வகித்தார். ராஜாராமன், ரவிச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் ரமேஷ், குமணன், வீரசெல்வம், ராஜவேலு, சுரேஷ், அருள், செல்வம், அருள்மொழிவர்மன், அமர், தமிழ்நிலவன், பிரசாத், சிவா, செந்தில், கோவில்பிள்ளை, விமல் மற்றும் பல திமுக கலந்து கொண்டுடனர்.
பின்னர் சன். சண்முகம் ஏற்பாட்டில் சிவா எம்,எல்.ஏ. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.