புதுச்சேரி

கோப்பு படம்

மருத்துவர் வீட்டில் நகைகள் கொள்ளை

Published On 2022-06-14 04:29 GMT   |   Update On 2022-06-14 04:29 GMT
  • புதுவை வி.வி.பி.நகரில் டாக்டர் வீட்டில் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
  • இவர் புதுவை பாரதி வீதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.

புதுச்சேரி:

புதுவை தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகரை சேர்ந்த பிரபாகர் (வயது38). டாக்டரான இவர் புதுவை பாரதி வீதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.

இவரது மனைவியின் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பார்க்க பிரபாகரன் தனது மனைவி குழந்தையுடன் வீட்டை பூட்டி விட்டு தூத்துக்குடிக்கு சென்றார்.

வீட்டை அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்ளும் படி வீட்டில் வேலை செய்யும் தேன்மொழி மற்றும் பிரபாகரனின் நண்பரான கோவிந்தசாலையை சேர்ந்த பாலமுருகன் ஆகியோரிடம் கூறி சென்றார்.

இந்த நிலையில் பிரபாகரன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு பிரபாகரன் அதிர்ச்சி யடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த மனைவியின் நகைகள் மற்றும் குழந்தைகளின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருந்தன. சுமார் 7 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

யாரோ மர்ம நபர்கள் டாக்டர் பிரபாகரன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதை நோட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நகைகளின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

இதுகுறித்து டாக்டர் பிபாகரன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எந்நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள வி.வி.பி.நகரில் மர்ம நபர்கள் துணிகரமாக வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News