புதுச்சேரி

 வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தர்களுக்கு கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி உணவு வழங்கிய காட்சி.

தி.மு.க. நகர இளைஞரணி சார்பில் உணவு விநியோகம்

Published On 2023-08-23 09:23 GMT   |   Update On 2023-08-23 09:23 GMT
  • வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • தி.மு.க. கோட்டக்குப்பம் நகர இளைஞரணி நிர்வாகி பிரேம் ஏற்பாட்டில் நடந்தது.

புதுச்சேரி:

கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை ரவுண்டா னாவில் தி.மு.க. நகர இளைஞரணி சார்பில் வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. கோட்டக்குப்பம் நகர இளைஞரணி நிர்வாகி பிரேம் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி கலந்து கொண்டு வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு சைவ உணவு, 5 விதமான பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் நகர் மன்ற உறுப்பினர்கள் வீரப்பன், சண்முகம், ஸ்டாலின்சுகுமார், சுகுமார் ஜாகிர், நாசர், பாரூக், அன்சாரி மற்றும் தி.மு.க. நகர இளைஞரணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News